Archives: ஜூன் 2020

வாழ்வின் கொந்தளிப்புகளைக் கடந்து செல்லல்

“இடது புறம் அமர்ந்திருப்பவர்களெல்லாரும், என்னோடு சேர்ந்து மூன்று முன்னோக்கிய தள்ளு விசையைக் கொடுக்கவும்!” என்று எங்களுடைய படகு வழிகாட்டி கத்தினான். இடது பக்கம் இருப்பவர்கள் உள்ளே மூழ்கி, நமது படகை சுழல் நீரோட்டத்திலிருந்து வெளியே இழுக்கவும். பல மணி நேரம், நாங்கள் எங்கள் வழிகாட்டியின் அறிவுரைக்குச் செவிசாய்க்க கற்றுக் கொண்டோம். கொந்தளிக்கும் ஆற்றினைப் பாதுகாப்பாக கடந்து செல்ல, எங்களுக்கிருந்த கொஞ்ச அநுபவத்தோடு, ஆறு பேரும் சேர்ந்து எப்படி தண்டு வலிக்க வேண்டுமென, அவனுடைய தளராத குரல் எங்களுக்கு உதவியது.

வாழ்க்கையிலும் இத்தகைய போராட்டங்கள் உண்டு அல்லவா? சில வேலைகளில்  நமது படகு அமைதலாகப் போய் கொண்டிருக்கும். நொடிப்பொழுதில், வரும் ஆபத்தைத் தவிர்க்க, மிக வேகமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தகைய பிரச்சனை நேரங்களில், நமக்கு ஒரு திறமையான வழிகாட்டி வேண்டும் என உணருவோம், ஒரு நம்பிக்கைக்குரிய குரல், நம்மை சுழல் ஓட்டங்களில் இருந்து வெளியே கொண்டு வர உதவ வேண்டுமென நாம் விரும்புவோம்.

சங்கீதம் 32 ல் தேவன் அத்தகைய குரலாக இருப்பதாக வாக்களிக்கின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” (வ.8) என்கின்றார். இதற்கு சற்று முன்பு,  பாவத்தை உமக்கு அறிவித்தேன் (வ.5) என்றும், உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான் (வ.6) என்றும் காண்கின்றோம், அப்படியானால், அவர் கூறுவதைக் கேட்கின்ற பங்கினையும் செய்ய வேண்டும். “உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வ.8) என்று அவருடைய அன்பினால் வெளிப்படும் வழி நடத்துதலை நமக்கு  நினைப்பூட்டுகின்றார். கடைசியாக சங்கீதக்காரன், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வ.10) என்கின்றார். நாமும் தேவனை நம்பி, நம்முடைய வாழ்வின் கடினமான பாதையில் நமக்கு வழிகாட்ட அவருடைய வாக்கின் மேல் பற்றுதலோடு, அவர் மீது அமைந்திருப்போம்.

சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: “மீன்பிடிக்கப்போகிறேன்” என்றான். அதற்கு அவர்கள்: “நாங்களும் உம்முடனேகூட வருகிறோம்” என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.  யோவான் 21:3

““ஹலோ என்ன விஷயம்” இந்த நள்ளிரவில் எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று தொலைபேசியின் மறுமுனையில் இருந்த.என்னுடைய சிநேகதியிடம் கேட்டேன்.

“நாங்கள் அனைவரும் சுகமே” என்று சொல்லிவிட்டு ஒரு கணம் தயங்கினாள்.” என் இதயம் கனமாக/பாரமாக இருப்பதால் என்னால் தூங்க முடியவில்லை. நான் யாரிடமாவது பேசியாக வேண்டும்” என்றாள்.

உரையாடல்தொடர்ந்தபோது தகவல் தொழில்நுட்ப…

புதிய நம்பிக்கையின் தேர்வு

“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் .... நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு.” ~ உபாகமம் 30:19

 

ஊரடங்கு முதலில் அறிவிக்கப்பட்டபோது எல்லாமே புதிதாக தோன்றியது. திடீரென வாழ்க்கை ஸ்தம்பித்ததினால் வழக்கமான செயல் முறைகள் பாதிக்கப்பட்டன. ஆயினும் இரண்டு மாதங்களும் நான்கு ஊரடங்கு நீடிப்புகளும் கடந்த பின் இப்பொழுது ஒரு புதிய இயல்பு நிலையை தழுவி உள்ளோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த காலகட்டத்தில் தேவனுடைய வேதத்திலிருந்து நம்பிக்கை பெற முயற்சித்தோம். வேதத்தில் காணப்படும்…

ஒரு மாதத்திற்கு முன்பு வாழ்க்கை முற்றிலும் இயல்பாக இருந்தது. சாலைகளில் எக்கச்சக்கமான போக்குவரத்து இருந்தாலும் வேலைக்கு விரையும் மக்கள், பள்ளிக்குச் செல்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாவிட்டாலும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பிள்ளைகள், தங்கள் அன்றாடத் தேவைகளை சந்திக்க தினசரி கூலி வேலை செய்பவர்கள், நெரிசலான பேருந்துகள், ரயில்கள், மக்கள் நடமாட்டம் நிறைந்த சந்தைகள், சிரிப்பும், வேடிக்கையும் தெறிக்கும் உணவகங்கள்... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இருப்பினும் கொரொனா வந்தபின் காரியங்கள் முற்றிலும் மாறிவிட்டன; அதற்கெதிரே உலகமே மண்டி இட்டது என்னலாம். முற்றிலும் இயல்பான…

எளிமையாக கேள்வி

அவளுடைய மருத்துவர், பிரிந்து காணப்படும் அவளுடைய விழித்திரை சரிபார்க்கக் கூடிய நிலையில் இல்லை என்றார். 15 ஆண்டுகள் பார்வையில்லாதவளாய், பிரெயில் முறையைக் கற்றுக் கொண்டு, ஒரு கோலையும், பழக்குவிக்கப் பட்ட நாயையும் பயன் படுத்தி வாழக் கற்றுக் கொண்டபின்பு, ஒரு நாள் அவளுடைய கணவன் வேறொரு மருத்துவரை அணுகி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டார் “அவளுக்கு எப்படியாகிலும் உதவ முடியுமா?” என்றார். உடனடியாக “ஆம்” என்ற பதில் வந்தது. அந்த மருத்துவர் அவளுக்குச் சாதாரண கண் புறை நோய் (cataracts) இருப்பதைக் கண்டுபிடித்தார். முதலாவது, அதனை அவளுடைய வலது கண்ணிலிருந்து நீக்கினார், அப்பொழுது அவளுடைய பார்வை 20/20 என்றிருந்தது. பின்னர், அவளுடைய இடது கண்ணிலும் அறுவை சிக்கிச்சை செய்தார், அதுவும் வெற்றியாக முடிந்தது.

ஒரு எளிய கேள்வி நாகமானின் வாழ்வை மாற்றியது. மிக வலிமையான இராணுவ வீரன் குஷ்டரோகத்தால் பாதிக்கப் பட்டான். ஆனால், எலிசா தீர்க்கதரிசி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம்     ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (2 இரா.5:10) என்று அறிவுரை கூறியதைக் கேட்ட போது, அவன் கோபமடைந்தான். நாகமானின் வேலைகாரன் அந்த படைத்தலைவனிடம் ஓர் எளிய கேள்வியைக் கேட்டான். “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச்   சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?” (வ.13) என்றான். அதற்குச் சம்மதித்த நாகமான் ஸ்நானம் பண்ணினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14).

சில வேளைகளில், நாமும் நம்முடைய வாழ்வில் சில பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம், காரணம், நாம் தேவனிடம் கேட்கவில்லை. நீர் உதவுவீரா? நான் போகலாமா? நீர் வழி நடத்துவீரா? என்று சந்தேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மிடமிருந்து சிக்கலான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்” என்று தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கின்றார் (ஏசா.65:24). எனவே, இன்றே அவரிடம் கேள்.

விடுவிக்கும் நம்பிக்கை

இந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.

ஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.

மீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர்! அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.

 

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது.